கருணாநிதியுடன் மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனை
சென்னை: சந்திராயன் திட்ட இயக்குனரும், செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழு தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினார்.
கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கருணாநிதியை அவரின் இல்லத்தில் சந்தித்த பின்னர் மயில்சாமி நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழில் படித்தாலும் அறிஞர்கள் ஆகலாம் என்பதை அறிவியல் மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக ஆய்வரங்க அறிக்கையை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
என்னை போல தமிழில் படித்தவர்கள் உலகளவில் அறிவியலில் சாதனை புரிந்திருக்கிறார்கள். அதே போல தமிழில் படித்த அணு விஞ்ஞானிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் இத்தகைய விஞ்ஞானிகள் பரவியுள்ளனர். தமிழ் மூலம் படித்த அறிஞர்களை இந்த மாநாட்டிற்கு அழைத்து வருவது பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்தினேன்' என்றார்.












Click it and Unblock the Notifications