என்ஜீனியரிங் மாணவி தற்கொலை- மாணவர் மீது ஈவ் டீசிங் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை சென்னையில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவருடன் படித்து வரும் மாணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை அருகே வண்டலூரில் உள்ள கிரசென்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி பிரேமலதா (19).கடந்த 5-ந்தேதி இவர் கல்லூரி ஆய்வகத்தில் ஆசிட் குடித்து விட்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிரேமலதா உயிரிழந்தார்.

அதே கல்லூரியில் 4-வது ஆண்டு படிக்கும் ஒரு மாணவர் ஈவ்டீசிங் செய்ததால்தான் மாணவி பிரேமலதா தற்கொலை செய்து கொண்டதாக பிரேமலதாவின் அண்ணன் சசிகுமார் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, அந்த மாணவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மாணவி பிரேமலதாவிடம், கடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அந்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை கேலி செய்தல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+