சூடானில் உள்நாட்டுக் கலவரம்- ராணுவம் தாக்கியதில் 200 பொதுமக்கள் பலி

தர்ஃபுர் பிராந்தியத்தில் உள்ள ஜெபல் மரா பகுதியில் தான் கலவரம் வெடித்துள்ளது. இப்பகுதியில் இயங்கி வரும் புரட்சிக்காரர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் முறிந்து போய் விட்டதால் மீண்டும் இங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
அங்கு தொடங்கி வேகமாக பல்வேறு பகுதிகளுக்கும் கலவரம் பரவி வருகிறது. கலவரத்தை ஒடுக்க ராணுவம், விமானப்படை ஆகியவை கடும் தாக்குதலில் இறங்கியுள்ளன. இதில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் இறந்துள்ளதாக புரட்சிக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. உயிரிழப்பை உறுதி செய்ய முடியவில்லை என்று ஐ.நா. கூறியுள்ளது. ஆனால் இதுவரை 237 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புரட்சிப் படையின் தலைவரான இப்ராகிம் அல் ஹில்லு கூறியுள்ளார். தொடர்ந்து ராணுவம் தாக்கி வருவதாகவும், விமானப்படை மூலம் மக்கள் மீது இரவு பகலாக குண்டு வீசி வருவதாகவும் ஹில்லு கூறியுள்ளார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், புரட்சிப் படையினர் கூறுவது தவறான தகவல். படையினர், எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை.
சூடான் விடுதலைப் படையின் அப்தல் வாஹித் பிரிவினர்தான் அவ்வப்போது படையினரைத் தாக்கி வருகின்றனர். அவர்களுடன் படையினர் மோதலில் ஈடுபட்டிருக்கலாம். மற்றபடி ராணுவம் தாக்குதல் எதிலும் ஈடுபடவில்லை என்றார்.
ஐ.நா. - ஆப்பிரிக்க யூனிடன் கூட்டு அமைதி காக்கும் படையினரும், இந்த மோதலை உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதிக்கு எங்களால் போக முடியவில்லை. எனவே உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று அப்படையின் தலைவரான பாட்ரிக் யம்வும்பா கூறினார்.
இந்த சண்டை காரணமாக ஜெபல் மாரா பகுதியிலிருந்து 1 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
டெரிபத் என்ற நகரில்தான் கடும் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு செல்லமுடியாமல் அமைதி காக்கும் படையினர் தவித்து வருகின்றனராம்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications