பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்ஜிஸ்தான் நாடுகளில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு பிலிப்பைன்சில் உள்ள காகயன், இசபெல்லா ஆகிய பகுதிகளில் காலை 7 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சில வினாடிகள் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
அதே போல முன்னாள் சோவியத் யூனியன் நாடான கிர்கிஸ்தானிலும் இன்று காலை 7.25 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரமான பிஷ்கேக் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்தது.
ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications