பாலக்காட்டில் வேன்-லாரி மோதல்: கோவையை சேர்ந்த 7 பேர் பலி
கோவை: கேரள மாநிலம் பாலக்காடு அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதியதில் கோவையை சேர்ந்த 7 பேர் பலியாயினர்.
கோவை பீளமேடு விக்னேஷ்வர் நகரைச் சேர்ந்த சீனிவாசன் (39), அவரது மனைவி சரிதா (35), மகன் கனீஷ்கர் (5), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தினேஷ் (25), அவரது மனைவி தீபா (22), லட்சுமிஸ்ரீ என்ற 6 மாத கைக்குழந்தை ஆகியோர் குருவாயூர் கோவிலுக்கு வேனில் சென்றனர்.
வேனை ரமேஷ் (45) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்றிரவு 2 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டனர். இன்று அதிகாலை பாலக்காடு புதுச்சேரி என்ற இடத்தின் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது மோதியது.
இதில் வேனில் இருந்த அனைவரும் அதே இடத்தில் பலியாயினர். லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பாலக்காடு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி வேன் கவிழ்ந்து 30 குழந்தைகள் காயம்:
தஞ்சை மாவட்டம் பூதலூரில் பள்ளி வேன் வயலில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 30 மாணவ, மாணவிகள் 30 காயமடைந்தனர்.
வேனின் பின்பக்க டயர் வெடித்ததால் வேன் நிலை தடுமாறி வயலில் கவிழ்ந்ததாகத் தெரிகிறது. காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications