நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

நித்யானந்தாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்த உடன், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பெங்களூரில் உள்ள ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர்.
ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்தனர்.
புதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருட்களுக்கு தீவைத்தனர்.
சீர்காழி சட்டணாதபுரத்தில் நித்தியானந்தா சாமியாரின் படங்களை பெட்ரோல் ஊற்றி இந்து மக்கள் கட்சியினர் எரித்தனர். சாமியாரின் பேனர், கட் அவுட்டுகளை எரித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பெங்களூர் தலைமையகம் சூறை:
நித்யானந்தாவை கைது செய்யக் கோரி பெங்களூரில் உள்ள அவரது தலைமை ஆஸ்ரமம் முன் சில கன்னட அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந் நிலையில் சிலர் ஆஸ்ரமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் உள்ளே புகுந்த ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்கினர்.
கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்:
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவசங்கர், சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துள்ளார் நித்தியானந்தா. இந்து சாமியார் என்ற போர்வையில் இந்து மதத்தை அவமதித்துள்ளார். அவர் மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. சாமியார் என்கிற போர்வையில் பல கோடிகளை சுருட்டியுள்ளார்.
எனவே இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதே போல கோவை போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் தரப்பட்டுள்ளது.
சிலைகள் உடைப்பு:
இதற்கிடையே குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தி்ல் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த நித்யானந்தாவின் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications