தூத்துக்குடி: கார்பைடு ஆலையில் ரூ.76 லட்சம் மின் திருட்டு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கார்பைடு தொழிற்சாலையில் ரூ.76 லட்சம் மதிப்பிலான மின் நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளில் மின்சார திருட்டு நடப்பதாக மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சென்னை மின் வாரிய பறக்கும்படை அதிகாரிகள் தூத்துக்குடி தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் தூத்துக்குடி சாயர்புரம் அடுத்த சிவலூர் கிராமத்தில் உள்ள கார்பைடு தயாரிக்கும் தொழிற்சாலையில் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் மின்வாரியத்திற்கு ரூ.76,79,145 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் உடனடியாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை மின் வாரியத்திற்கு செலுத்தியதால் குற்றவியல் நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications