தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி்-கருணாநிதியிடம் மஸ்தூர் சங்கம் கோரிக்கை
மதுரை: தென்னக ரயில்வே திட்டங்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து, கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும் என்று தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என். கண்ணையா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என். கண்ணையா நிருபர்களிடம் கூறுகையில்,
'மானாமதுரை - விருதுநகர் அகலப் பாதையை நிறைவேற்ற 70 கோடி ரூபாய் தேவை. ஆனால், 55 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று , திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்கோடு மற்றும் பொள்ளாச்சி - கோவை பணிகள் முடிவடைய 150 கோடி தேவை. ஆனால், 65 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை- திருவாரூர் - காரைக்குடி- திருத்துறைப்பூண்டி அகலப்பாதை திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் தேவை. வெறும் 60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை - போடி, திருச்சி - காரைக்கால் - திருக்குவளை, கொல்லம் - நெல்லை, கொல்லம் - திருச்செந்தூர் - தென்காசி அகலப்பாதை திட்டங்கள் 2011 மார்ச்சிற்குள் முடிக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த திட்டங்கள் நிறைவேற ரூ 528 கோடி தேவைப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து, ஒதுக்கப்பட்ட 813 கோடி ரூபாய்க்கு பதிலாக கூடுதலாக 528 கோடியை பெற்றுத்தர வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications