இந்தியாவில் காபி ஏற்றுமதி 43% அதிகரிப்பு!

இந்த இரு மாதங்களிலும் காபி ஏற்றுமதி மதிப்பு ரூ.434.50 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டின் இதே மாதங்களில் காபி ஏற்றுமதி 27 ஆயிரம் டன்னாக இருந்தது. ஏற்றுமதி மதிப்பு ரூ.290 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி அதிகரித்திருப்பது குறித்து வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்தியாவின் காபி விலை நிலையாக உள்ளதால், பல வெளிநாடுகள், இங்கிருந்து காபியை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்வகையில், இத்தாலி, ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளில் இருந்து அதிக அளவில் காபி இறக்குமதி செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாலி 7,463 டன், ரஷ்யா 5,609 டன், ஜெர்மனி 3,764 டன் காபி இறக்குமதி செய்துள்ளன. மொத்த காபி ஏற்றுமதியில் சுமார் 29,000 டன் காபியாகவும், மீதமுள்ள 9,726 டன் மறு ஏற்றுமதி அடிப்படையில் இன்ஸ்டென்ட் காபியாக ஏற்றுமதியாகி உள்ளது.
சி.சி.எல். புராடக்ட்ஸ் இந்தியா (4,936 டன்), நெஸ்லே இந்தியா (3,281 டன்), டாட்டா காபி (2,875 டன்) ஆகிய மூன்று நிறுவனங்கள், சென்ற ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மிக அதிக அளவில் காபியை ஏற்றுமதி செய்துள்ளன.
வெளிநாடுகளில், அராபிகா காபிக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால், ரோபஸ்டா வகை காபியை விட, அராபிகா வகை காபி ஏற்றுமதி 48 சதவீதம் அதிகரித்து 11,083 டன்னாக உயர்ந்துள்ளது' என்றனர்.












Click it and Unblock the Notifications