மதுவிலக்கு கோரி மனித நேய மக்கள் கட்சி மறியல்
நெல்லை: மதுவிலக்கை அமுல்படுத்த கோரி வரும் 7ம் தேதி மாநிலம் முழுவதும் 100 இடங்களில் மதுக்கடைகள் முன்பு மறியல் நடத்தப்போவதாக மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் இடம், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
காந்தி, அண்ணா, பெரியார், காயிதே மில்லத் ஆகியோரின் கனவு நனவாக மதுக்கடை இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடைகள் முன் மறியல் போராட்டம் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
இதில் பங்கேற்க மதுவினை எதிர்க்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இது போல் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதுபோல் விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications