கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது
சென்னை: கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த போலீஸ்கார் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூரைச் சேர்ந்தவர் பரணி. இவர் மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் ஒரு பெண்ணைப் பார்ப்பதற்காக வந்துள்ளார் பரணி. ஆனால் அந்தப் பெண் வீட்டில் இல்லை.
இதையடுத்து அந்தப் பெண்ணின் தோழியான கமலாவின் வீட்டுக்குப் போனார். கமலாவிடம், எங்கே உனது தோழி என்று விசாரித்தார். தனக்குத் தெரியாது என்று கமலா கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த பரணி, கமலாவின் கையைப் பிடித்து இழுத்துள்ளாராம். மேலும் சரமாரியாக திட்டவும் செய்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கமலாவின் தந்தை துணை ஆணையர் பாஸ்கரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில், போலீஸார் பரணி கைது செய்யப்பட்டார்.
பரணி மீது மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications