அன்று சச்சினுக்கு எதிர்ப்பு-இன்று பாராட்டு: பரிதாப பால் தாக்கரே

குவாலியரில் சச்சின் டெண்டுல்கர் அடித்த இரட்டை சாதனையைத் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அனைவரும் கோஷமிட ஆரம்பித்துள்ளனர். இந்த கோஷ வரிசையில் இப்போது சிவசேனாவும் இணைந்துள்ளதுதான் வேடிக்கை, விநோதமாகும்.
மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்று சச்சின் சொன்னதற்காக அவரை வறுத்தெடுத்தது சிவசேனா. ஆனால் இன்று சச்சினை புகழ்ந்து தள்ளியுள்ளார் பால் தாக்கரே.
இதுகுறித்து சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், இந்த நாட்டின் 100 கோடி மக்களும் ஏற்கனவே சச்சினை பாரத ரத்னாவாக முடிசூட்டி விட்டனர்.
போர்க்களத்தில் அன்று முகலாயர்களை மாமன்னன் சிவாஜி வெற்றி கண்டான். அதேபோல இப்போது கிரிக்கெட் போர்க்களத்தில் வாகை சூடியுள்ளார் மாவீரன் சச்சின். இதுபோன்ற மாவீரர்கள் மகாராஷ்டிராவில் மட்டும்தான் பிறப்பார்கள் (கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது இதுதான்).
சிவாஜி கத்தியை சுழற்றினார், அதேபோல இன்று பேட்டைச் சுழற்றுகிறார் சச்சின்.
பாரத ரத்னா விருதுக்கு யாரும் சச்சின் பெயரை பரிந்துரைக்கத் தேவையில்லை. ஏற்கனவே அவர் பாரத ரத்னாதான் என்று குண்டக்க மண்டக்க புகழ்ந்து தள்ளியுள்ளார் தாக்கரே.












Click it and Unblock the Notifications