குடிசை பகுதி மக்கள் தொகை தனியே கணக்கெடுப்பு!
சென்னை: 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளின் போது குடிசைப்பகுதிகளை தனியே கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
'2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்' இரண்டு கட்டமாக நடக்கிறது. நகராட்சி பகுதிகள், ஊராட்சி, பேரூராட்சி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களாக ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும், மேற்பார்வையாளர்களாக தலைமை ஆசிரியர்கள், வருவாய்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒருவர் வீதம் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற் கட்டமாக வீட்டு பட்டியல் கணக்கெடுக்கும் பணி வரும் ஜூன் முதல் தேதியில் இருந்து ஜூலை 15 வரை நடக்கிறது.
இதில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, குடியிருப்புகளின் விபரம் சேகரிக்கப் பட உள்ளது. இந்த பணியுடன் சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்பட உள்ளது.
இதில் தனி நபர் அடையாள அட்டை வழங்குவதற்காக தனி நபரின் அனைத்து அங்க அடையாளங்கள் மற்றும் விபரங்களும் சேகரிக்கப் பட உள்ளன.
இந்த பணிகளையும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களே மேற்கொள்ள உள்ளனர்.வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு பணியை தொடர்ந்து 2011 பிப்ரவரி 9 முதல் 25 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
ஒரு கணக்கெடுப்பாளருக்கு 150 வீடுகள் அல்லது, 600 நபர்கள் என்ற அளவில் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த பணிக்காக எட்டாயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிசை பகுதிகளையும், அங்குள்ள மக்கள் விபரங்களையும் தனியாக கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் குடிசை பகுதிகளை அடையாளம் கண்டு மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications