Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஏப். 5 முதல் சரக்கு லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

Lorry Strike
டெல்லி: ஏப்ரல் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விலைகள் கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து லாரிகளும் அன்று முதல் ஓடாது. அனைத்து சரக்கு லாரிகள் சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன என்றார்.

டீசல் மீதான வரி உயர்வு அதிகரித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 மறறும் அதற்கு மேலும் உயர்ந்துள்ளது.

இதைத் திரும்பப் பெற வேண்டும் என மோட்டார் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மேலும், சுங்கச் சாவடிகளி்ல் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தியது, இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான வரி உயர்வு ஆகியவற்றையம் திரும்பப் பெற வேண்டும் என மோட்டார் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் சரக்கு லாரிகள் அனைத்தும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளதால், சரக்குப் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+