கிரீஸ் நாட்டில் இருந்து தூத்துக்குடி வந்த 20 கண்டெய்னர் கழிவு-திருப்பி அனுப்ப நடவடிக்கை

இதுகுறித்து சுங்கத்துறை ஆணையர் ராஜன் கூறுகையில்,
சிவகாசியை சேர்ந்த ஸ்ரீபதி பேப்பர் போர்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கிரீஸ் நாட்டில் இருந்து 11 கண்டெய்னர்களில் 253 டன் பழைய கழிவு காகிதங்களை இறக்குமதி செய்தது. இந்த கண்டெய்னர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, கண்டெய்னரில் பழைய பேப்பர் கழிவுகள் தவிர மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்தன.
மேலும் பஞ்சு துணி கழிவுகள், பயன்படுத்திய உள்ளாடைகள், ரப்பர் கையுறை கழிவுகளும் இருந்தன.
இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சோதனை நடத்தினர். அதில் இந்தக் கழிவுகள் பெரும் சுகாதார கேடு விளைவிக்கக்கூடியவை என்று தெரியவந்தது.
ஆனால், உண்மைக்குப் புறம்பாக கழிவு பேப்பர்கள் மட்டுமே உள்ளதாக டெல்லியை சேர்ந்த நிறுவனம் இறக்குமதி சான்று கொடுத்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல பிரெஞ்சு காலனி பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 கழிவுகள் அடங்கிய கண்டெய்னர்களையும் சுங்கத்துறை மடக்கியுள்ளது.
இதில் 217 டன் கழிவுகள் உள்ளன. இந்த 20 கண்டெய்னர்களையும் மீண்டும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வி.வி.ஆர்.இம்பெக்ஸ் நிறுவனம் சீனாவில் இருந்து செல்போன் உதிரி பாகங்களை கடந்த ஜனவரி 21ம் தேதி இறக்குமதி செய்தது. இந்த கண்டெய்னர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு மாதமாகக் கிடக்கிறது. யாரும் பில் தாக்கல் செய்யாததால், சுங்கத்துறை அதிகாரிகள் அதை திறந்து சோதனையிட்டனர்.
அப்போது அதில் உலகின் முன்னணி செல்போன் நிறுவனங்களின் முத்திரை உள்ள செல்போன் உதிரி பாகங்கள், முன்னணி நிறுவனங்களின் கைக்கடிகாரங்களும் இருந்தன.
இவை சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருப்பதால் அந்த கண்டெய்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என்றார்.
சென்னை வந்த ஆயில் டேங்கரில் ஊழியர் சாவு:
இந் நிலையில் சென்னை வந்த கப்பலில், ஆயில் டேங்கர் கப்பலை சுத்தப்படுத்தியபோது ஏற்பட்ட விபத்தில், ஊழியர் ஒருவர் இறந்தது தொடர்பாக 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2ம் தேதி பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவில் சென்னை வந்த கப்பலில் நடுக்கடலில் கப்பலின் ஆயில் டேங்கரை சுத்தப்படுத்தும் பணியில் 3 ஊழியர்கள் ஈடுபட்டனர். டேங்கருக்குள் இறங்கி சுத்தப்படுத்திய போது மூவருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஊழியர்கள் வெளியே வந்து விட்டனர்.
ஒருவர் மட்டும் மயங்கிவிட்டார். அவரை படுக்கையை கட்டி, டேங்கரில் இருந்து மேலே தூக்கியபோது இரும்பு சங்கிலி அறுந்து மீண்டும் அவர் டேங்கருக்குள் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை குளிர்சாதன அறையில் வைத்து சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இகு குறி்த்து துறைமுக போலீசார் விசாரணை நடத்தியபோது, பலியானவர் தூத்துக்குடியை அடுத்த புன்னக்காயலை சேர்ந்த சத்தியன் (26) என்று தெரிய வந்தது.
சத்தியன் இறந்தது தொடர்பாக கப்பலின்ல் கேப்டன் சூரத் தேவ் பாண்டே (39), துணை கேப்டன் லியோலின் அருண் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கவனக்குறைவு காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications