2050 வரை காத்திருக்க மாட்டோம்- முன்பே இந்திய அரசை அகற்றுவோம்: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி

நேற்றுதான், 2050ம் ஆண்டு புரட்சி நடத்தி இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னாள் ராணுவத்தினரின் உதவியை நாட அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறியிருந்தார் உள்துறை அமைச்சர் ஜி.கே.பிள்ளை.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்துள்ளார் கிஷன்ஜி.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2050 வரை காத்திருக்க தேவையில்லை. அதற்கு முன்பே எங்களது இலக்கை அடைவோம்.
2050ம் ஆண்டுக்கு முன்பே இந்திய அரசை தூக்கி எறிந்து விடுவோம். எங்களுக்கென்று ஒரு படை உள்ளது. அதன் உதவியுடன் இந்திய அரசை தூக்கி எறிவோம்.
72 நாள் போர் நிறுத்த அறிவிப்பை நாங்கள் வெளியிட்டுள்ளோம். எனவே நாங்கள் மீண்டும் ஒன்று சேருவதாக கூறுவதில் உண்மை இல்லை. அந்த கேள்விக்கே இடமில்லை. உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப முயலுகிறார் ப.சிதம்பரம்.
அமைதி உடன்படிக்கை தொடர்பாக மத்திய அரசுதான் செயலாற்ற வேண்டும். நீண்ட காலத் தீர்வுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார் கிஷன்ஜி.
2050ம் ஆண்டுக்கு முன்பே புரட்சி செய்து விடுவோம் என்று மாவோயிஸ்ட் தலைவர் பகிரங்கமாக மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications