2011 சென்சஸில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை - பிள்ளை
டெல்லி: சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது என மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 1931ம் ஆண்டுக்கு பின் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது நிறுத்தப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் கல்லூரி படிப்பு முதல் வேலை வாய்ப்பு வரை பல்வேறு தளங்களிலும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி அடிப்படையில் நடத்துவது தவிர்க்கப்பட்டு வருகிறது.
மக்கள் தொகையின் சாதிவாரியான புள்ளி விவரங்கள் இல்லாத காரணத்தால், இடஒதுக்கீடு முறையை அமல் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கம் வரை, சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்தியாக வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் பாமக உட்பட லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வருகிற 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதியை ஒரு அம்சமாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 2001ம் ஆண்டுக்கும் பின்னர் 2011ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நாடு முழுவதும் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி அம்சம் இடம் பெறாது என மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications