கலவரத்தை தூண்டியதாக ராஜ் தாக்கரே மீது 73வழக்குகள்
Subscribe to Oneindia Tamil
மும்பை: கலவரத்தை தூண்டியதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மீது பல்வேறு நீதிமன்றங்களில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 73 வழக்குகளில் இதுவரை, ஆறில் ராஜ்தாக்கரே ஆஜராகி ஜாமீன் உத்தரவு பெற்றுள்ளார். மற்ற வழக்குகளில் இனிமேல் தான் அவர் ஆஜராக வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜல்குவான் மாவட்டத்தில் உள்ள பாட்குவான் மற்றும் சோப்ரா நீதிமன்றங்கள், அவுரங்காபாத்தில் கங்காப்பூர் நீதிமன்றம் ஆகியவற்றில் மட்டும் ராஜ் தாக்கரே இதுவரை ஆஜராகி இருக்கிறார்.
மற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படும் போது, ஒவ்வொன்றாக ஆஜராகி ஜாமீன் பெற வேண்டியிருக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்குகள் அத்தனையிலும் ராஜ்தாக்கரே சார்பில் பிரபல கிரிமினல் வக்கீல் சாயாஜி நாங்க்ரே ஆஜராகிறார்.












Click it and Unblock the Notifications