சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறைக்கு தகுதியில்லை: ராமகோபலன்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் உள்ள சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறை மூலம் ஒரு குழுவை அரசு அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காரணம், குற்றமற்றவர்கள் தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும்.
ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியை தண்டிக்க முடியது. அப்படி நினைப்பதே வேடிக்கையானதாகும்.
அறநிலையத் துறையே குற்றவாளிகளின் கூடாரம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். அப்படி இருக்க அறநிலையத் துறைக்கு அதிகாரம் கொடுத்து விட்டால் துறவிகளுக்கு 'லைசென்ஸ்' கொடுப்பதை ஏலம் விட்டு பணம் பார்த்து விடுவார்கள்.
அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை, ஆச்சார்ய சபை போன்றவற்றிற்குத் தான் அந்த தகுதி உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications