நியாயமான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்-பாஜக 'அலேக்' பிரசாரம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பென்னாகரம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை தடுக்க தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்னாகரத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை. ஆனால் நியாயமான வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு பிரசாரம் செய்வோம்.
சிறுபான்மை இனத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் வரும் ஜூலை மாதம் இதை கண்டித்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது.
விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில் வரும் ஏப்ரல் 21ல் நாடாளுமன்றம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப் போகிறோம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாற்று நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏன் எடுக்கவில்லை.
ஆன்மீகத்தின் பெயரில் இந்து, கிறிஸ்தவ மற்றும் பிற மத தலைவர்கள் தவறு செய்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications