தூத்துக்குடியில் சிலை திருட்டு - புகார் கொடுத்தவர் கைது
தூத்துக்குடி: ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பமாக புகார் கூறிய தலைமை ஆசிரியரே கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆசீர்ராஜாசிங். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
ஆறுமுகநேரியை சேர்ந்த குமார், பார்த்தசாரதி ஆகிய இருவரும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நடராஜர் மற்றும் ஒன்றரை அடி உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகிய 2 ஐம்பொன் சாமி சிலைகளை திருடி சென்று விட்டதாக புகார் கூறினார்.
இதையடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஐம்பொன் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆசீர் ராஜாசிங்கிடம் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது அவருக்கு சிலைகள் எப்படி கிடைத்தது என விசாரித்தார்.
அதற்கு அவர் முதலில் தனது சகோதரர் கொடுத்தாகவும், பின்னர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான சிலைகளை தான் கோர்ட் உத்தரவுபடி பாதுகாத்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தன்னிடம் அந்த சிலைகள் வந்ததற்கான ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைக்கவில்லை. அவரது முரண்பட்ட பதில்களால் டிஐஜிக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. உடனே அவரை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆசிர் ராஜாசிங் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications