'குடி'மகனிடம் சரமாரியாக குத்து வாங்கிய ஏட்டு
மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த வாலிபர் முன்னால் சென்று கொண்டிருந்த 2 பேரை இடித்து தள்ளிவிட்டு பைக்கை நிறுத்தாமல் சென்றார்.
உடனே போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பைக்கை மடக்கி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மார்த்தாண்டம் நந்தன்காட்டை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் குடிபோதையில் பைக்கை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த வாலிபரை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மது குடித்ததை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைக்காக ஏட்டுவிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். அப்போது ஆத்திரமடைந்த முருகன் ஏட்டு ஜான்ரோசை தாக்கினார்.
அவர் நிலை தடுமாறியதைப் பயன்படுத்தி தப்பியோட முயற்சித்தார். ஆனால் சுதாரித்த ஏட்டு பிடித்து நிறுத்தினார். அப்போது மீண்டும் ஏட்டுவை முருகன் தாக்கினார். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அந்த ஏட்டை சரமாரியாகத் தாக்கினார் குடிகார முருகன்.
குடிமகனின் தாக்குதலுக்கு ஆளான ஏட்டு ஜான்ரோஸ் காயமடைந்தார். குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் போதை வாலிபர் முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications