விஜயகாந்த்துக்குச் சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் மரணம்-போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. இது விஜயகாந்த்துக்குச் சொந்தமானது.
இந்தக் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் செங்கல்பட்டில் தங்கி படித்து வந்தார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார்.
மாணவரின் மறைவுக்கு கல்லூரி முதல்வர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications