பேருந்து ஓட்டும்போது செல்போன் - வேலூரில் அரசு டிரைவர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

Cell Phone
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பணியின் போது செல்போன் வைத்திருந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் மூன்று பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தார்கள். இரண்டு பேருந்திலும் ஓட்டுநர்கள் செல்போனில் பேசிய படியே ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது.

அரசு பஸ்கள் உட்பட வாகனங்களில் ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அரசாங்க உத்தரவு அமலில் உள்ளது. எனினும் பல டிரைவர்கள் இதை மீறி செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து நேற்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்து மேலாளர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வேலூர் புதிய, பழைய பஸ் நிலையம் காட்பாடி, பாகாயம் உட்பட பல இடங்களில் பஸ் டிரைவர்களிடம் சோதனை நடத்தினர்.

அப்போது 11 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் வைத்திருந்த 4 டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அரசு பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போனில் பேசினால் அல்லது வைத்திருந்தாலோ 94454 56027 அல்லது 94454 56028 என்ற மொபைல் எண்களில் புகார் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+