புதிய சட்டசபையில் கருணாநிதி படத்தை வைக்க ஜெ. எதிர்ப்பு

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி வருபவர் என்று அவரை வருணித்து, இவ்வாறு இந்த மாமன்றத்திற்கு சிறப்பு சேர்த்து வரும் கருணாநிதியின் உருவப்படத்தை புதிய சட்டசபை வளாகத்திலும், பழைய சட்டசபை வளாகத்திலும் வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது சட்டமன்ற மரபுகளுக்கு முரணான செயல்.
மிகச் சிறந்த தேசத் தலைவர்கள் அல்லது நாடாளுமன்றவாதிகளின் சிலைகளையோ, திருவுருவப் படங்களையோ நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றால், சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களை அமைப்பதற்கென்று மக்களவை சபாநாயகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அந்தக் குழுதான் யார் யாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். இது நாடாளுமன்ற நடைமுறை.
எம்.ஜி.ஆரின் உருவப்படம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று அதிமுக மட்டுமல்லாமல், அப்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் விரும்பியது.
அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், சிங்காரம் ஆகியோர் இதனை வலியுறுத்தி சட்டமன்றத்திலேயே பேசினர்.
எம்.ஜி.ஆரின் உருவப்படம் திறந்து வைக்க அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், எம்.ஜி.ஆர். உருவப்படம் இந்த மாமன்றத்திலே திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் இன்று என்ன நிலைமை? யாரும் கோரிக்கை விடாத சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலையும் பெறாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெறாமல், தோழமை கட்சிகளையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுப்பதுதான் ஜனநாயக நெறிமுறையா? இந்த முடிவு எடுக்கப்பட்ட முறையே ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறியுள்ளார்.
சி.ஆர்.சரஸ்வதிக்குப் புதுப் பதவி:
இதற்கிடையே, அதிமுக மகளிர் அணியில் நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு துணை செயலாளர் பதவி வழங்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் தலைமைக் கழகப் பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இது போல் தலைமைக் கழகப் பேச்சாளர் திருப்பூர் விசாலாட்சியும் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications