லாலு-முலாயம் ஆதரவு வாபஸ்: அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை-சோனியா

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஜோதிடர் அல்ல. எதையும் என்னால் கணிக்க முடியாது. எங்களது முன்னாள் கூட்டாளிகள் தொடர்ந்து எங்களுடன் இருப்பார்கள் என்றே கருதுகிறேன். அவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை.
மகளிர் மசோதாவை முதலி்ல் ராஜ்யசபா நிறைவேற்றட்டும். லோக்சபா குறித்து பிறகு பார்க்கலாம். லோக்சபாவில் மசோதா நிறைவேறப் போவதை நான் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.
மசோதா குறித்து மமதா பானர்ஜி மிகவும் ஆர்வத்துடன்தான் இருந்தார். ஆனால் இப்போது அவரது நிலை மாறி விட்டதாக அறிகிறேன். திமுகவும் இந்த மசோதாவை முழுமையாக ஆதரிக்கிறது. பிரதமருக்கு முழு ஆதரவை அது தெரிவித்துள்ளது.
பவாரும் கூட முழுமையாக ஆதரித்துள்ளார். கூட்டணியில் உள்ள அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கூட்டணிக்குள் இதுதொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் சோனியா.












Click it and Unblock the Notifications