For Daily Alerts
Just In
விஜயேந்திரருக்கு 42வது பிறந்த நாள்- ஜெயந்திரருக்கு பாத பூஜை செய்தார்
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் விஜயேந்திரர் தனது 42வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி ஜெயேந்திரருக்கு அவர் பாத பூஜை நடத்தினார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் விஸ்வரூப தரிசனம் செய்து சிறப்பு பூஜை ஆராதனை நடத்தினர். சந்திரமவுலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடை பெற்றது.
பின்னர் 10 மணிக்கு சிறப்பாக அமைக்கப்பட்ட பீடத்தில் ஜெயேந்திரருக்கு கனகாபிஷேகத்தை விஜயேந்திரர் நடத்தினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சங்கர மடத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
Comments
Story first published: Thursday, March 11, 2010, 17:43 [IST]