தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும் ஜெ. வக்கீலுக்கு சிபிஐ கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசாக ரூ. 2 கோடி காசோலைகள் வந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு வராமல் இருக்கும் ஜெயலலிதாவின் வக்கீலுக்கு சிபிஐ கண்டனம் தெரிவித்தது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளுக்கு ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் பிறந்த நாள் பரிசாக வந்தன. ஆனால் அதை அரசுக் கருவூலத்தில் சேர்க்காமல் தானே வைத்துக் கொண்டதால் அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் வக்கீல் ஆஜராகவில்லை. இதற்கு சிபிஐ வக்கீல் கண்டனம் தெரிவித்தார்.

வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவின் வக்கீல் இவ்வாறு வராமல் இருப்பதாக கூறினார்.

விசாரணைக்குப் பின்னர் வருகிற 30ம் தேதியன்று ஜெயலலிதாவின் வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி மனோகரன், விசாரணையையும் அன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+