10 ஆண்டுகளாக மனித உரிமைக்காக போராடும் ஷர்மிளா மீண்டும் கைது!
இம்பால்: மணிப்பூரில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் நாகா தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்தில் கடந்த 1958ம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது.
ஆனால் இந்த சட்டத்தினால் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படவில்லை. மாறாக மனித உரிமை மீறல்களே அதிகளவில் அரங்கேறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலா அருகே உள்ள மாலோம் என்ற கிராமத்தில் ராணுவ வீரர்கள் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக்கொன்றதை ஷர்மிளா என்ற இளம் பெண் பார்த்தார்.
கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அப்பாவி மக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, இதற்கு காரணமான கொடிய சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
மனித உரிமை மீறல்களை கண்டித்தும், ராணுவ சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து பல மாதங்கள் உணவை மறுத்து வந்த ஷர்மிளாவை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக திரவ உணவு அளித்து போலீசார் உயிர் பிழைக்கச் செய்தனர்.
குறிப்பிட்ட காலம் வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை பொது இடத்தில் தொங்கினார் ஷர்மிளா.
மீண்டும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து வலுக்கட்டாயமாக திரவ உணவு அளிப்பதும், சிறையில் இருந்து விடுதலையாகி ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதும் ஆண்டுதோறும் வாடிக்கையாக நடக்கும்.
இப்படியே கடந்த 9 ஆண்டுகளாக ஷர்மிளாவின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கடந்த திங்கள் கிழமை அன்று, சமீபத்தைய நீதிமன்ற காவல் முடிந்து ஷர்மிளா விடுதலை செய்யப்ப்பட்டார்.
30 வயதேன ஆன ஷர்மிளா, தொடர் போராட்டம் காரணமாக, வற்றிய உடலும், பிதுங்கிய எலும்புமாக சிறையில் இருந்து வந்தவர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காக பொது இடத்தில் அமர்ந்துவிட்டார்.
இதையடுத்து வழக்கம் போல போலீசார் ஷர்மிளாவை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு திரவ உணவு பலவந்தமாக தரப்பட்டது.
இதைத்தொடர்ந்து புதன்கிழமை இரவு மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஷர்மிளாவின் போராட்டம், சிறைவாசம் 10வது ஆண்டிலும் தொடர்கிறது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications