தீவிரவாத அச்சுறுத்தல்- புதுச்சேரியில் 2 கமாண்டோப் படைகளை நிறுத்த முடிவு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு 2 கமாண்டோப் படையினரை நிரந்தரமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வெளிநாட்டினர் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால், அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு புதுச்சேரி அரசை எச்சரித்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கமாண்டோப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு நிரந்தரமாக இரண்டு கமாண்டோப் படையினரை நிறுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவிலிருந்து 200 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தலா 100 பேர் கொண்ட இரு பிரிவாக இவர்கள் புதுச்சேரியைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இந்த நடவடிக்கை புதுச்சேரி காவல்துறையினருக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். அவசரத் தேவையின்போதும் இந்தக் கமாண்டோப் படையினர் புதுவை காவல்துறையினருக்கு உதவியாக செயல்படுவர்.












Click it and Unblock the Notifications