பென்னாகரத்துக்குப் பிரசாரத்திற்குப் படையெடுக்கும் தென் மாவட்ட திமுக, அதிமுகவினர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பென்னாகரம் இடைத்தேர்தல் பணிக்கு தென்மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் படையெடுத்து சென்று வருகின்றனர்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதி்முக, தேமுதிக, திமுக, பாஜக கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பென்னாகரம் இடைத் தேர்தலுக்கு பின் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிக்களுக்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள், ஓன்றிய, நகர, தொகுதி பிரமுகர்கள் படை எடுத்துள்ளனர்.

பென்னாகரம் இடைத் தேர்தல் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விடுதிகள் நிரம்பி வழிவதால் தென்மாவட்டத்தில் இருந்து படையெடுக்கும் கட்சிகாரர்கள் அருகில் உள்ள கிராமம், நகரங்களில் 15 தினங்களுக்கு வீடுகளை வாடகை பிடித்து தங்கி வருகின்றனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள வீடு புரோக்கர்கள், வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோர்க்கு பணமழை கொட்டுவதாக அங்கு முகமிட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

திருமங்கலம், திருச்செந்தூர் தொகுதிகளை போன்று பென்னாகரம் தொகுதியிலும் கரன்சி மழை பொழிய துவங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+