திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் - எஸ்.பி. நீக்கம்
சென்னை: திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட எஸ்.பி. சுதாகரை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது.
பென்னாகரம் தொகுதியில், திமுகவினர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக ஆதாரத்துடன் புகார் கொடுத்தும், எஸ்.பி. சுதாகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்திருந்தார்.
புகைப்பட ஆதாரம், மனுக்களின் நகல்கள் உள்ளிட்டவற்றுடன் வேல்முருகன் இந்தப் புகாரை நரேஷ் குப்தாவிடம் கொடுத்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் தற்போது சுதாகரை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.
பென்னாகரம் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணி எஸ்.பி.யாக இருந்து சுதாகர் விடுவிக்கப்பட்டார்.
அந்த இடத்தில் தற்போது தேனி எஸ்.பி. பாலகிருஷ்ணன், கோவை எஸ்.பி.கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை ராணுவப் படை வந்தது...
இதற்கிடையே பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவப் படையினர் இன்று பென்னாகரம் வந்து சேர்ந்தனர்.
தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை இவர்கள் பணியில் இருப்பவர்.












Click it and Unblock the Notifications