2008-09ல் ரூ. 1 லட்சம் கோடி உர மானியம் வழங்கிய மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த 2008-09ம் ஆண்டில் மத்திய அரசு உர மானியமாக கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரசாயணத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்கையில், கடந்த 2008-09ம் ஆண்டில் உர மானியமாக அரசு செலவிட்ட தொகை ரூ. 99,494.71 கோடியாகும். இது கடந்த 2007-08ம் ஆண்டில் ரூ. 43,319.16 கோடியாக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே உர மானியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உரங்களின் விலை அதிகரித்து வந்ததாலும், நுகர்வு அதிகரித்ததாலும் மானியத்தின் அளவும் அதிகரிக்கப்பட்டது.
இந்தியாவின் யூரியா பயன்பாடு 2008-09ல் 266.47 லட்சம் டன்களாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டு 261.67 லட்சம் டன்களாக இருந்தது.
டிஏபி, எம்ஓபி, காம்ப்ளக்ஸ் உரங்களின் அளவு 99.04 லட்சம் டன்களாக இருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications