நெல்லை: ஒரே நாளில் 4 பேர் தற்கொலை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இடிந்தகரை அருகே உள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கனிஷ்டா. இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் ஆகிறது.
தனிக்குடிதனம் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கனிஷ்டா கோபித்து இடிந்தகரையிலுள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
கூடன்குளம் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை கொழுந்து வழக்கு பதிவு செய்தார். ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.
விஜயநாராயணம் அருகேயுள்ள வடிவாள்புரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை; விவசாயி.
மனநிலை சரியில்லாமல் இருந்த செல்லத்துரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலஇலந்தை குளத்தை சேர்ந்த உலகன் மகன் வடிவேல். மனநிலை பாதிக்கப்பட்ட இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பை அருகேயுள்ள கவுதமபுரியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 9ம் தேதி தீக்குளித்தார்.
நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications