மேகாலயா, இந்தோனேசியாவில் கடும் பூகம்பம்!
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவின் மேற்கு பாப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேதாரமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
மேற்கு பாப்புவா மாகாணத்தில் உள்ள மனோக்வாரி மாவட்டத்தில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 342 கிமீ தொலைவை மையம் கொண்டு, இன்று பகல் 11.53க்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக இந்தோனேசிய பூகம்ப ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.
மேகாலயாவில்...:
இதற்கிடையே, மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகள் பதிவாகியிருந்த இந்த பூகம்பம், மேகாலயாவில் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை 4.50 மணிக்கு உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications