கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
ஜெய்பூர்: கல்விச் சுற்றுலா சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலியானார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் எல்லையோர பகுதியில் இன்று காலை இந்த விபத்து நிகழந்தது.
ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 162 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு சுற்றுலாப் பயணகள் அதிகளவில் வருவார்கள்.
இந்நிலையில் விருந்தாவன் என்ற இடத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் சொந்த ஊரான ஜலாவாருக்கு மாணவர்கள் குழு ஒன்று பேருந்து ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது ஆற்றுப்பகுதியை கடக்கும் போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி பேருந்து ஆற்றில் விழுந்தது.
இதில் 21 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.விபத்தில்












Click it and Unblock the Notifications