முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மனைவி மரணம்
சென்னை: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் மனைவி லலிதா இன்று காலை மரணமடைந்தார்.
69 வயதாகும் லலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலையில் உயிர் பிரிந்தது.
தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி, அண்ணா நகர் 6-வது மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று லலிதா உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கருணாநிதி ஆறுதல் கூறினார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அவரது தம்பி தேவராஜன் மற்றும் உயர் அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார்.
ரத்தினவேல் பாண்டியன் -லலிதா தம்பதிகளுக்கு சுப்பையா, ராஜேந்திரன், சேகர், கந்தசாமி, காவேரி மணியன் ஆகிய 5 மகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இதில் ரவிச்சந்திரன், சேகர், காவேரி மணியன் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து 3 மகன்களும் வரவேண்டி உள்ளதால் லலிதாவின் உடல் தகனம் புதன்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.