பிப்ரவரியில் பணவீக்கம் 9.89 சதவீதமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil

இது இதற்கு முந்தைய மாதத்தில் 8.56 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருள்களின் விலை உயர்வும், எரிபொருள்கள் மீதான வரி உயர்வுமே பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரையின் விலை 55.47சதவீதம் அளவு உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதர உணப் பொருள்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
எரிபொருள்களின் குறியீட்டெண் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய ரிசர்வ் வங்கி 75 புள்ளி அடிப்படையில் ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியது. இதன் மூலம் ரூ. 36,000 கோடி ரொக்கம் புழக்கத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது மத்திய நிதி அமைச்சகம் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கத்தையே சந்தையில் நிலவும் விலை நிலையைக் கணிக்கப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications