For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.2.70 கோடி போலி செல்போன் உதிரி பாகங்கள் பறி்முதல்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சீனாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ரூ.2.70 கோடி மதிப்பிலான போலி செல்போன் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த விவிஆர் இம்பக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த பிப் 12ம் தேதி சீனாவில் இருந்து ஒரு கன்டெய்னர் தூத்துக்குடி துறைமுகம் வந்தது.

அதில் செல்போன் உதிரி பாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கன்டெய்னர் வந்து ஒரு மாதமாகியும் அந்த நிறுவனத்திடமிருந்து முறையாக ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு அவை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நேற்று மத்திய சேமிப்பு கிடங்கில் இருந்த அந்த கன்டெய்னரை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் முன்னனி செல்போன் நிறுவனங்களின் பேரில் போலி உதிரிபாகங்களும், வீடியோ கேமரா பேட்டரிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும். இதனை இறக்குமதி செய்த நிறுவனம் முலம் மீண்டும் சீனாவிற்கு திருப்பி அனுப்ப சுங்க இலாகா நடவடிக்கை எடு்த்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X