மான்கறி டாக்டரின் மகன், மருமகளுக்கு போலீஸ்வலை
சென்னை: திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் மோசடி செய்து சிறையில் அடைக்கப்பட்ட மருத்துவரின் மகன் மற்றும் மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, மைலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை நடத்தி வந்தவர் டாக்டர் விஜயகுமார்.
இவர் மான்கறி வைத்தியம் என்ற பெயரில் மோசடி செய்வதாக புகார் கூறப்பட்டது. சுமார் ரூ.2 கோடி அளவுக்கு பணம் மோசடி செய்ததாக 27 பேர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இவற்றின் அடிப்படையில் இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் இவர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பிரசாந்த லட்சுமி என்ற பெண், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் டாக்டர் விஜயகுமாரின் மகன் டாக்டர் ஜெகதீஸ்குமார், அவரது மனைவி டாக்டர் அனிலா ஆகியோரும் வைத்தியம் பார்ப்பதாகக் கூறி ரூ.4 லட்சம் பணம் மோசடி செய்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனு மீது மைலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications