For Daily Alerts
Just In
இளைஞர் காங். தேர்தல்-நாளை திருச்சி வரும் ராகுல் காந்தி
திருச்சி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை திருச்சி வருகிறார். இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் பார்வையிட்டு ஆலோசனை நடத்துவதற்காக அவர் வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சி படு பிசியாக காணப்படுகிறது. காரணம் இங்கு நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல். ஒவ்வொரு கோஷ்டியும் தத்தமது செல்வாக்கை நிலைநாட்ட கடுமையாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
தற்போது வட்ட அளவிலான தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தல் குறித்து ராகுல் காந்தி மிகுந்த ஆர்வமுடன் உள்ளார். இத்தேர்தல் குறித்து அக்கறை காட்டி வரும் ராகுல் நாளை திருச்சிக்கு வந்து தேர்தலை பார்வையிடவுள்ளார்.
Comments
Story first published: Tuesday, March 16, 2010, 10:23 [IST]