சித்தியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற ஆட்டோ டிரைவர்
சென்னை: ஆத்திரத்தில் சித்தியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பெருங்குடிகெனால் புரத்தை சேர்ந்தவர் ராமு (40). கூலி தொழிலாளி இவரது மனைவி மலையம்மாள். வீட்டின் பக்கத்தில் மலையம்மாளின் அக்காள் முனியம்மாள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அடிக்கடி இவர்களுக்கிடையே சண்டை நடந்தது. நேற்று முன்தினம் மீண்டும் மலையம்மாள்- முனியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த முனியம்மாள் மகன் ஆட்டோ டிரைவரான பச்சையப்பனும் (27) சண்டை போட்டார். இதில் ஆத்திர மடைந்த அவர் ஆட்டோவில் இருந்த பெட்ரோலை மலையம்மாள் மீது ஊற்றி தீபற்றவைத்தார்.
தீ உடல் முழுவதும் பரவியது. மலையம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து தீயை அணைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சிகிச்சை பலனின்றி மலையம்மாள் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் பச்சையப்பனை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பெருங்குடி பஸ் நிலையம் அருகே ஆட்டோவில் கொலையாளி சுற்றிதிரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் விரைந்து வந்து பச்சையப்பனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications