மரகத லிங்கம் பெயரில் மோசடி-7 பேர் கும்பல் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெண்கல லிங்கத்தை, மரகத லிங்கம் எனக் கூறி 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நில புரோக்கர் சங்கிலி. இவரை 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்தனர்.
தங்களிடம் மரகதலிங்கம் இருப்பதாகவும், அதன்மதிப்பு 10 லட்சம் ரூபாய் எனக் கூறி சங்கிலியை, புளியம்பட்டி அருகே ஒரு தோட்டதிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த ஒரு சிறிய லிங்க சிலையை காட்டினர்.
ஆனால், அது மரகத லிங்கம் அல்ல என்பதை உறுதி செய்து கொண்ட சங்கிலி, இது குறித்து புளியம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த லிங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், அந்த லிங்கம் திருநெல்வேலி பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு 5,300 ரூபாய்க்கு வாங்கப்பட்ட, வெண்கல லிங்கம் எனத் தெரிய வந்தது.
இதனையடுத்து, மோசடி செய்ய முயன்ற திருநெல்வேலி ஆறுமுகம் (34) பாண்டி (44) நம்பிராஜன் (37) முருகன் (36) தூத்துக்குடி பொன்ராஜ் (36) சிவகாசி அசோக்குமார் (34) விழுப்புரம் கூவையூர் கதிர்வேல் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications