கோளாறுடன் புறப்பட்டு சென்ற கிங்ஃபிஷர் விமானம்
மும்பை: தரையிறங்குவதில் கோளாறு ஏற்படும் என எச்சரிக்கப்பட்ட நிலையிலேயே கிங் ஃபிஷர் விமானம் 25 பயணிகளுடன் புறப்பட்டு மும்பைக்கு சென்றதாக புகார் கூறப்படுகிறது.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸின் ஐடி-513 விமானம் நேற்று பிற்பகல் 2.40க்கும் கோவாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட திட்டமிடப்பட்டிருந்தது.
புறப்படுவதற்கு முன்னதாக, விமானத்தில் தரையிறங்குவது தொடர்பான கோளாறு இருப்பதை விமான ஓட்டி கண்டுபிடித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து விமானம் புறப்பட்டு மும்பையில் போய் பத்திரமாக தரையிறங்கியது.
ஆனால், மும்பையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள், 'கிங் ஃபிஷர் விமானம் புறப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவே இல்லை. அதற்குள் புறப்பட்டு விட்டார்கள்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தாங்கள் புறப்பட தயாராக இருப்பதாக விமான நிறுவனத்தினர் கூறி அனுமதி பெற்றுவிட்டனர்' என்றனர்.
ஆனால், இதுதொடர்பாக கிங் ஃபிஷர் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் மிர்புரி விளக்கம் அளிக்கையில்,
'டிஜிசிஏ விமான போக்குவரத்து இயக்குனரக விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு தான் நாங்கள் நடந்துகொண்டுள்ளோம். எந்த விதிகளையும் மீறவில்லை' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications