மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா - ஏப். 16ல் தொடக்கம்

அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடா வருடம் நடைபெறும் முக்கிய விழா சித்திரைத் திருவிழாவாகும்.
இந்த திருவிழாவைக் காண லட்சோபம் லட்சம் பக்தர்கள் மதுரையில் குழுமுவார்கள். மதுரையே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும்.
இந்த விழாவோடு அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழாவும் இணைந்து நடத்தப்படுவது சைவ - வைணவ நல்லிணக்கத்தின் மிகச் சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம், ஏப்ரல் 16-ம் தேதி காலை 9.40 மணி முதல் 10.05 மணிக்குள் நடைபெறுகிறது. கோயிலில் சுவாமி சன்னதி முன் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்படுகிறது.
அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஏப்ரல் 23ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 24ம் தேதி திக் விஜயம் ஆகியவை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 26ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறும்.
திருவிழாவின் நிறைவாக ஏப்ரல் 27ம் தேதி சுவாமி, அம்மன் தேர்த்தடம் பார்க்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications