டாஸ்மாக் ஊழியர் ஸ்ட்ரைக் - அரசுக்கு ரூ. 20 கோடி இழப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று மதுவிற்பனை பல இடங்களில் பாதிக்கப்பட்டது.
இந்த ஒரு நாள் மதுக் கடை அடைப்பினால் அரசுக்கு ரூ.15 முதல் 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு, பணி நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னிகாக்குமரி, மதுரை, சிவகங்கை முதல் சென்னை வரை பல்வேறு நகரங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
பல இடங்களில் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தாங்களே கடையை திறந்து வைத்து வியாபாரத்தை நடத்த திட்டமிட்டனர்.
இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் தகராறு ஏற்பட்டது.
இந்த ஒரு நாள் விற்பனை பாதிப்பினால் தமிழக அரசுக்கு ரூ.15 முதல் 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications