கை எலும்பு முறிவு: ராஜாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது தவறி கிழே விழுந்ததில் அவருக்கு கை எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி- அனுஷா நிச்சயதார்த்த நிகழ்ச்சி, நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புவதற்காக, ஹோட்டலில் போடப்பட்டுள்ள கம்பளத்தில் முதல்வரின் துணைவி ராஜாத்தி நடந்து வந்தார்.
அப்போது திடீரென அவர் நிலை தடுமாறி, கீழே விழுந்தார். இதில், அவரது கையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்தனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications