ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

மேலும், இந்த வழக்கில், 42 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் பெங்களூர் தனி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பெருத்த பின்னடைவாக இந்த உத்தரவு கருதப்படுகிறது. கடந்த 14 ஆண்டு காலமாக இந்த வழக்கு கர்நாடகத்தில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த சுதர்சன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச், அவரது கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 42 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கால நிர்யணம் செய்யுமாறும் பெங்களூர் தனி கோர்ட்டுக்கு அது உத்தரவிட்டுள்ளது.

அதற்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு போதுமான வாய்ப்புகள் தருமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+