இந்திய ராணுவ ரகசியங்கள் சென்னை வழியாக யுஎஸ்சுக்கு கடத்தலா?
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த ஒரு பார்சலில் இந்திய கடற்படை குறித்த வரைபடங்கள் மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு ராணுவ ரகசியங்கள் கடத்தப்படும் முயற்சியாக இது இருக்கக் கூடும் என்ற கோணத்தி்ல மத்திய உளவுப் பிரிவு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்த 5 பெட்டிகளில் சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது திடுக்கிட்டனர்.
பெட்டிகள் அனைத்தும் சேலம் ஏற்காட்டைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசிக்கும் அட்ரைன் மார்லே (வயது 78) என்பவருக்கு அனுப்பப்படுவதாகத் தெரிந்தது. இவர் இந்திய ராணுவ பொறியியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பதிவேடுகளைப் பார்க்கும் போது, மார்லே அவற்றை அமெரிக்காவில் உள்ள தனது முகவரிக்கு அவரே 'புக்' செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு பார்சலில் இருந்த ஆவணங்கள் மிக ரகசியமான தகவல்களை உள்ளடக்கியிருந்தன.
இதில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தின் 'புளு பிரின்ட்', ஹைதராபாத் விமான நிலையத்தின் புளு பிரின்ட் போன்ற ஆவணங்கள் இருந்தன.
பொது மக்களுக்கு இவை தேவையற்ற ஆவணங்களாகும். ஆனால் மார்லேயின் பெட்டிக்குள் அவை ஏன் வந்தது என்ற கேள்வி எழுந்தது.
அமெரிக்காவுக்கு அவை அனுப்பப்படுவதால் உடனடியாக மத்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
இப்போது மத்திய உளவுத் துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மற்ற 4 பார்சல்களையும் சோதனை போட்ட போது, அவற்றில் மார்லேயின் சொந்த உடமைகள் காணப்பட்டன. அமெரிக்காவில் வைத்து மார்லேவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்












Click it and Unblock the Notifications