நேபாள முன்னாள் பிரதமர் கொய்ராலா மரணம்
Subscribe to Oneindia Tamil

நுரையீரல் நோய் காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். தனது மகளும் துணைப் பிரதமருமான சுஜாதா கொய்ராலாவின் வீட்டில் ஓய்வு பெற்று வந்த அவர் இன்று மரணமடைந்தார்.
தகவல் கிடைத்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் முன் திரண்டனர். பிரதமர் மாதவ் குமார் நேபாள், அமைச்சர்கள் அவரது உடலுக்கு இறுதி டு மரியாதை செலுத்தினர்.
நேபாளத்தில் அமைதி திரும்பியதிலும், மாவோயிஸ்டுகளை அமைதிப் பாதைக்குக் கொண்டு வந்து அரசியலில் பங்கேற்க வைத்ததிலும் கொய்ராலாவுக்கு பெரும் பங்குண்டு.
மேலும் மன்னராட்சியை ஒழித்து அங்கு குடியரசு ஆட்சியை அமலாக்கியதிலும் கொய்ராலாவின் பங்கு மகத்தானது.












Click it and Unblock the Notifications